லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தானியர்களே.. உங்களுக்கு ரூம் கிடையாது.. அதிர வைக்கும் உ.பி. ஹோட்டல் அறிவிப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பாகிஸ்தானியர்களுக்கு அறைகள் வழங்கப்படமாட்டாது என அதிரடி அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாதில் பிரயக்ராஜில் உள்ளது ஹோட்டல் மிலன். இங்கு வெளியே ஒரு அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.

UP hotel announces entry of Pakistani nationals restricted

அதில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானியர்களுக்கு அறைகள் ஏதும் வழங்கப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த ஹோட்டலின் மேனேஜரிடம் கேட்ட போது அவர் கூறுகையில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்த நோட்டீஸை நாங்கள் வைத்துள்ளோம். பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இங்கு வரக்கூடாது.

அப்படியே வந்தாலும் அவர்களுக்கு அறைகளை நாங்கள் ஒதுக்கித் தர மாட்டோம். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நாங்கள் இந்த வகையில் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் என்றார்.

இந்த அறிவிப்பை பார்க்கும் ஹோட்டல் வாடிக்கையாளர்கள் ஹோட்டல் நிர்வாகத்தின் தேசப்பற்றை கண்டு லயித்து போகின்றனர்.

English summary
Hotel Milan Palace announces that Entry of Pakistani Nationals restricted after Pulwama attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X