மாபெரும் பேரணி.. மோடியின் கோட்டையில் மாஸ் பிரச்சாரம்.. வாரணாசியில் கலக்கும் பிரியங்கா!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிகப்பெரிய அளவில் பிரச்சார பேரணி நடத்தி இருக்கிறார்.
லக்னோ: லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாரணாசியில் மிகப்பெரிய அளவில் பிரச்சார பேரணி நடத்தி இருக்கிறார்.
வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதியாகும். இங்கு காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தலுக்காக அவர் உத்தர பிரதேசத்தில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாட்டுக்கு இதுதான் கடைசி தேர்தல்.. ஆ.ராசா எச்சரிக்கை
காலையில் கூட்டம்
காங்கிரஸ் சார்பாக இன்று உத்தர பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். இதற்காக பெரிய பிரச்சார மேடை அமைக்கப்பட்டு இருந்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மக்களை சந்தித்தார்
அதன்பின் வாரணாசியில் உள்ள கிராமங்களுக்கு பிரியங்கா காந்தி சென்றார். அங்கு மக்களிடையே பேசினார். முக்கியமாக உங்கள் தொகுதி எம்.பி மோடி உங்களுக்கு என்ன செய்தார் என்று பிரியங்கா வாரணாசி மக்களிடம் கேள்வி கேட்டார். வாரணாசியில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் கிடைக்காத வரவேற்பு இன்று கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும்
அதன்பின் மீண்டும் மாலையில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். ஆனால் இந்தமுறை பிரச்சார மேடையில் பேசாமல், பிரச்சார பேரணி போல நடத்தினார். மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போதும் அந்த பிரச்சாரம் நடந்து வருகிறது.
சூப்பர்
இந்த பிரச்சார பேரணிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. முன்னும் பின்னும் திரளாக மக்கள் சூழ்ந்து பிரியங்காவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி சமயங்களில் லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.