எவ்வளவு போராட்டம் நடந்தாலும் கவலையே இல்லை.. சிஏஏ ரத்தாகாது.. அமித் ஷா அதிரடி
Recommended Video
லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களால் அச்சப்பட மாட்டோம்; சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சி.ஏ.ஏ. விளக்கப் பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளின் குரலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குரலைப் போலவே உள்ளன.
மணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
சி.ஏ.ஏ. போராட்டங்கள்
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டங்களைக் கண்டு நாங்கள் அச்சப்படமாட்டோம்.
போராட்டத்தில் பிறந்தவர்கள்
ஏனெனில் நாங்கள் போராட்டங்களினூடே பிறந்தவர்கள். நாங்கள் போராட்டங்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.
உங்களின் பதில்
எதிர்க்கட்சிகளாகிய நீங்கள் அதிகாரத்தில் இருந்த போது இதைத்தானே கூறினீர்கள். இப்போது அதிகாரத்தில் இருக்கும் நாங்களும் அதையே திருப்பி கூறுகிறோம்.
மோடியை பலப்படுத்துங்கள்
8866288662 என்ற தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சி.ஏ.ஏ.வுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். சி.ஏ.ஏ.வுக்கான உங்கள் ஆதரவு பிரதமர் மோடியின் கரத்தை வலிமையாக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
அகிலேஷ் எதிர்ப்பு
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், மக்களின் குரலை கேட்க மறுக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பணிந்து போக மாட்டோம் என்றார்.