அட கொடுமையே.. முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி... புகார் கொடுத்த மனைவி.. "நோஸ் கட்" செய்த கணவர்!
முத்தலாக் செய்த மனைவியின் மூக்கை கணவன் அறுத்துள்ளார்
Recommended Video
லக்னோ: "நோஸ்கட்" பண்ணிட்டாருன்னு சும்மா பேச்சுக்கு சொல்லுவோம்.. ஆனா நிஜமாகவே நோஸ்கட் ஒன்று உபியில் நடந்துள்ளது. முத்தலாக் செய்த கணவன் குறித்து புகார் அளித்ததால், மனைவியின் மூக்கை நிஜமாகவே அறுத்துவிட்டார்.
எத்தனையோ சர்ச்சைகள், கருத்துகள், விமர்சனங்களுக்கு அப்பால், முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி.. முத்தலாக் தடை சட்டத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இப்படி எல்லா வகையிலும் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் முதன்முதலாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. முதல் சம்பவமே வெட்டுகுத்து, ரத்தம், போலீஸ் ஸ்டேஷன் வரை போய்விட்டது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அவரது கணவர் போன் செய்து, 3 முறை தலாக் சொல்லியதுடன், இதன்மூலம் விவாகரத்து செய்துவிட்டதாகவும் சொல்லி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீசுக்கு போன் மூலம் புகார் தந்தார்.
இந்த புகாரின் பேரில் இரு வீட்டாரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை... இரு தரப்புமே ஒத்து வரவில்லை. இதனால் போலீசார் முத்தலாக் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டதால் மனம் நொந்து போன பெண், மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த வீட்டில் இருந்தவர்கள், பெண்ணை சரமாரி அடித்து உதைத்துள்ளனர். மேலும் கணவன் உள்ளிட்டோர், பெண்ணின் மூக்கையும் அறுத்துள்ளனர். விஷயம் கேள்விப்பட்டு பெண்ணின் தாயார், அங்கு சென்றிருக்கிறார். அவரையும் கல்லாலேயே அடித்து உதைத்துள்ளனர். இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை நடந்து வருகிறது.