லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்களுடன் நாங்கள் கூட்டா? அதுக்கு நான் உயிரை விட்டுடலாம்.. பிரியங்கா காந்தி பகீர் பேச்சு!

லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

லக்னோ: லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நேற்று அளித்த பேட்டியில், பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணியில் இணையாதது எங்களுக்கு வருத்தம் கிடையாது. நாங்கள் இப்போதும் நண்பர்களே. நாங்கள் பாஜகவின் வாக்குகளை பிரிப்போம்.

எங்கள் திட்டம் எல்லாம் பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் கட்சியின் கணக்குப்படி அது கண்டிப்பாக நடக்கும் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.

என் கருத்து

என் கருத்து

இதுகுறித்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்தார். அதில், பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி உதவுகிறது. பிரியங்கா காந்தி சொல்லும் கணக்கு தவறானது. பிரியங்கா காந்தி சார்பாக காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் வேட்பாளர்கள் பாஜகவிற்கு உதவுவார்கள். பாஜகவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டு வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பிரியங்கா பேட்டி

பிரியங்கா பேட்டி

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, பாஜகவுடன் நாங்கள் கூட்டா? என்ன கதை இது. அவர்களை போல மோசமான கொள்கை கொண்டவர்களுடன் நாங்கள் எப்படி சேர முடியும். முடியவே முடியாது. என் வாழ்நாளில், நான் அரசியல் இருக்கும் வரை அது நடக்காது.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

உத்தர பிரதேசத்தில் உள்ள எல்லா காங்கிரஸ் உறுப்பினர்களும் பாஜக வாக்கை பிரிக்கவே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். வேறு யாருடைய ஓட்டையும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரிக்க போவதில்லை. நான் இதில் தெளிவாக இருக்கிறேன்.

வலிமையில்லாத நபர்கள்

வலிமையில்லாத நபர்கள்

அதே சமயம் நாங்கள் வலிமையில்லாத வேட்பாளர்களை நிறுத்தவில்லை. நாங்கள் நிறுத்தியவர்கள் எல்லோரும் பலமான வேட்பாளர்கள். எங்கள் சொந்த பலத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம். பெரும்பாலான இடங்களில் எங்கள் சொந்த பலத்தில் நாங்கள் நிற்கிறோம்.

மானம்

மானம்

நாங்கள் வேட்பாளர்களை மிக மிக கவனமாக தேர்வு செய்து இருக்கிறோம். நாங்கள் பாஜகவை ஆதரிப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. அதை செய்வதற்கு நான் இறந்து போய்விடலாம். நான் இதில் தெளிவாக இருக்கிறேன், என்று பிரியங்கா காந்தி கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

English summary
Would Rather Die Than Help BJP In Any Way says Priyanka Gandhi On Akhilesh Yadav remark.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X