காதலன் கொலையில் திடீர் திருப்பம்.. மற்றொரு இளைஞருடன் உல்லாசமாக இருந்த பெண்..உ.பி.யில் ஷாக் சம்பவம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பாக அவரது காதலியை விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
உத்தரப்பிரதேச மாநிலம் கெரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்ஜீத் குமார். இவர் புதன்கிழமை முதல் காணாமல் போனார். பின்னர் அவரது சடலம் அடுத்த இரண்டு நாட்களில் சன்சி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திடுக் தகவல்கள்
அதைத் தொடர்ந்து விசாரணையை தொடங்கிய காவல் துறையினர் முதற்கட்டமாக சர்ஜீத்தின் செல்போனை ஆராய்ந்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கு அவர் தொடர்ந்து பேசியது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது திடுக் தகவல்கள் கிடைத்தன.
பாசம்
அந்த பெண் கூறுகையில், எனது கணவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இழந்தேன். இதனால் எனது வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவித்து வந்தேன். அப்போது என்னிடம் எனது உறவினர்கள் சர்ஜீத் மற்றும் ஹர்பால் ஆகியோர் என்னிடம் பாசமாக நடந்து கொண்டனர்.
இருவருடன் காதல்
இதனால் அவர்கள் இருவரையும் காதலித்தேன். ஹர்பாலுக்கு தெரியாமல் நான் சர்ஜீத்தையும் காதலித்தேன். இந்த விவகாரம் ஒரு நாள் ஹர்பாலுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது நானும் சர்ஜீத்தும் உல்லாசமாக இருந்தோம்.
சர்ஜீத்
அப்போது ஹர்பால் ஆத்திரமடைந்தார். உடனே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஹர்பால், சர்ஜீத்தின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நாங்கள் இருவரும் சேர்ந்து சர்ஜீத்தின் சடலத்தை சன்சி கிராமத்தில் போட்டுவிட்டு சென்றோம் என்றார்.