மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் சாவுக்கு காரணம்.. என் ரத்த கண்ணீருக்கு காரணம் ரவி.. மாணவன் தற்கொலையின் பகீர் பின்னணி

டியூஷன் டீச்சர் செய்த டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டான் மாணவன்

Google Oneindia Tamil News

மதுரை: "பப்ளிக் எக்ஸாம் பேப்பர் எந்த ஊருக்கு போனாலும் சரி.. நீ ஃபெயில் ஆகுற மாதிரி செஞ்சிடுவேன்"ன்னு ரவி வாத்தியார் மிரட்டவும்.. என் மகன் அவர் கால்ல விழுந்து கெஞ்சியிருக்கான்.. எனக்கு இது தெரியாம போச்சே.. மகனை இழந்துட்டேனே" என்று 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு கொண்டது குறித்து பெற்ற தந்தை கண்ணீர் மல்க கூறுகிறார்.

மதுரை மாவட்டம் தொட்டப்பாநாயக்கணூரை சேர்ந்த மாணவன் பாலாஜி... உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

வகுப்பின் கணக்கு வாத்தியார் ரவி டியூஷன் நடத்தி வருகிறார். 9ம் வகுப்பு படித்தபோது, பாலாஜி இங்குதான் டியூஷன் போயுள்ளான். ஆனால் அந்த டியூஷன் தூரமாக இருக்கவும், இப்போது 10-ம் வகுப்புக்கு வேறு இடத்திற்கு டியூஷன் சென்றிருக்கிறான். இதுதான் பிரச்சனை!

தலையில் ரத்த காயம்.. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.. விழுப்புரத்தில் பயங்கரம் தலையில் ரத்த காயம்.. எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.. விழுப்புரத்தில் பயங்கரம்

ஆசிரியர் ரவி

ஆசிரியர் ரவி

பாலாஜியை தினமும் திட்டி தீர்த்து கொண்டே இருந்தார் ரவி.. வெறுப்பை அதிகமாக காட்டினார்.. காரணமே இல்லாமல் அடித்துள்ளார்.. இதை எல்லாவற்றையும் பாலாஜி பெற்றோரிடமும் சொல்லி அழுதுள்ளான். அவர்களும் மகனை சமாதானப்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அட்டகாசம்

அட்டகாசம்

ஆனால் டியூஷன் வாத்தியாரின் அட்டகாசம் 6 மாசமாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த வாரமும் பாலாஜியை ரவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி, வீட்டில் பெற்றோர் வெளியே சென்ற நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவலறிந்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை ஆரம்பித்தனர்.

கடிதம்

கடிதம்

அப்போதுதான், நோட்டு புத்தகத்தில் ஒரு பக்கத்தில் காரணத்தை பாலாஜி எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. 'என் சாவுக்கு காரணம் ரவி. என்னை ரொம்பவும் கொடுமை செய்தான். அவனுக்கு தண்டனை தர வேண்டும். முக்கியமாக என் ரத்த கண்ணீருக்கு காரணமான ரவிக்கு தண்டனை தர வேண்டும்.. நண்பனுக்கும், பெற்றோருக்கும் இறுதி வணக்கம்' என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தமிழக மக்களை ரொம்பவே உலுக்கிவிட்டது.

அழுதுட்டே சொன்னான்

அழுதுட்டே சொன்னான்

மகனை பறிகொடுத்த தந்தை சிங்கம் இதை பற்றி சொன்னதாவது: "ரவி சார் என்னை திட்டிட்டே இருக்காருப்பா... அவர் டியூஷனில் நான் சேரலையாம்.." என்று என் மகன் என்கிட்ட அழுதுட்டே சொன்னான்.. அதனால, நான், ஆசிரியர் வாத்தியாரிடம் போய் பேசினேன். அதுக்கு "ஒவ்வொரு தேர்விலும் உங்க பையன் காப்பி அடிச்சுதான் எழுதறான்.. அதனாலதான் திட்டினேன்" ன்னு காரணம் சொன்னார்.

கொடுமை

கொடுமை

அவர் சொன்னதை உண்மைன்னு நம்பி என் பையனை வீட்டுக்கு வந்து ரொம்பவும் திட்டிட்டேன்.. ஆனா, அதுக்கப்பறம் ரவி வாத்தியார் திட்டுவதாக என் பையன் என்கிட்ட சொல்லாமலேயே விட்டுட்டான்.. என்கிட்ட புகார் சொன்னதால, ரவி வாத்தியாரும் நிறைய கொடுமையை இதுக்கு அப்பறம்தான் என் மகனுக்கு செஞ்சிருக்கார்.

மிரட்டல்

மிரட்டல்

"பப்ளிக் எக்ஸாம் பேப்பர் எந்த ஊருக்கு போனாலும் சரி.. நீ ஃபெயில் ஆகுற மாதிரி செஞ்சிடுவேன்"ன்னு என் மகன்கிட்ட மிரட்டியும் இருக்கார். உடனே என் பையன் பயந்துபோய், அந்த ரவி வாத்தியார் காலில் விழுந்தும் இருக்கிறான்.. இதெல்லாம் அவன்கூட படிக்கிறவங்க சொல்லிதான் எனக்கு தெரியும்.. என் பையனை நான் சரியா புரிஞ்சுக்காம போய்ட்டேன்.. இல்லேன்னா என் பையனை இழந்திருப்பேனா?" என்று கண்ணீர் முட்டிக் கொண்டு அழுகிறார். இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை

தற்கொலை

இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், வாத்தியார் ரவியிடம் தினம் தினம் சித்ரவதை அனுபவிப்பதைவிட இறந்துவிடுவதே மேல் என்று பாலாஜி 15 நாளைக்கு முன்னாடியே முடிவு செய்து விட்டானாம்.. அப்போதே அந்த கடிதத்தையும் எழுதி வைத்துள்ளான். இந்த கடிதம் எழுதிய பிறகுதான், சக மாணவர்களிடம் தற்கொலை செய்துக்கிறது எப்படின்னு அடிக்கடி கேட்டுட்டே இருந்தானாம்.. 2 முறை அதற்கு முயற்சியும் செய்தானாம்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

நன்றாக படிக்கக் கூடியவனாம் பாலாஜி.. யாரிடமும் சத்தமாக கூட பேசமாட்டானாம்.. சக மாணவர்களுக்கு நெருக்கமாகவே இருந்திருக்கிறான்.. ஆனால், பாலாஜி எவ்வளவு மனஉளைச்சலுக்கும், கொடுமைக்கும் உள்ளாகி இருந்திருக்கிறான் என்பதற்கு ஒருமையில் ஆசிரியரை குறிப்பிட்டு எழுதியிருந்த அந்த இறுதி கடிதமே சாட்சி!

English summary
10th std student balaji committed suicide due to his tuition techer torcher and usilampatti police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X