தொட்டிலில் விளையாடிய போது சேலை கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி.. மதுரையில் பரிதாபம்
மதுரை: மதுரை வாடிப்பட்டி அருகே தொட்டிலில் விளையாடிய சிறுவன் சேலையில் கழுத்து இறுகி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (13) என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் மாந்தோப்பில் குழந்தைக்கு அமைந்த தொட்டிலில் அமர்ந்து பிரகாஷ் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் கழுத்து இறுகி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சேலையால் கழுத்து இறுதி மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுப்பி சிறுவன் இறப்பு குறித்து வாடிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
13 years old boy died after saree stranguled his neck near Madurai.
Story first published: Monday, October 5, 2020, 17:38 [IST]