மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு
மதுரை: மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 15-ஐ தாண்டியது. அது போல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மதுரையில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் ஆவர்.
3 மாதம்தான்.. முகத்தில் ஒரு அமைதி.. சரியான திட்டமிடல்.. மகாராஷ்டிராவிற்கு கொரோனா தந்த ஹீரோ.. உத்தவ்!
மதுரை
ஈரோட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 3 தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து மதுரையைச் சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்தக் கொதிப்பு
இதையடுத்து அவருக்கு 24-ஆம் தேதி மாலை முதல் உடல்நிலை மோசமானது. அவர் நுரையீரல் அடைப்புக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது போல் அவருக்கு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் கட்டுப்பாடில்லாமல் இருந்தது.
நபர்
இதையடுத்து அவர் 25-ஆம் தேதி அதிகாலை பல்வேறு உறுப்புகள் கோளாறு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இவருக்கு மதுரை அண்ணாநகரில் இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்த சடங்கில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து இவர் வாழ்ந்த தெரு சீல் வைக்கப்பட்டது.
4 பேருக்கும் பாதிப்பு
இந்த நிலையில் இறந்த நபரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை போல் இன்று கொரோனா பாதிப்புள்ள 4 பேரும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றிக் கொண்டனர்.