தலைக்கேறிய டிக் டாக் மோகம்.. பெரும் சிக்கலை தேடிக் கொண்ட தீபா - ரூபா.. வீணாய் போன வாழ்க்கை!
டிக்டாக் பெண்களை விலைமாதர்களாக சித்தரித்த 2 பேர் கைதாகி உள்ளனர்
Recommended Video
மதுரை: தீபாவும், ரூபாவும் ரொம்ப நெருக்கம்.. டிக்டாக்கில் இவர்கள் செய்த அட்டகாசமும், ஈடுபாடும்.. அவர்களை விலைமாதர்களாக சித்தரித்த அபாயத்துக்கு சென்றுவிட்டது!
மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்தவர்கள் தீபா, ரூபா (பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன) இவர்கள் நெருங்கிய தோழிகள். இருவருமே டிக்டாக்-கில் தோன்றி, நடிப்பு திறமையை வெளிக்காட்டுபவர்கள். இருவருமே கல்யாணமானவர்கள். இருவருக்கும் 25 வயதாகிறது!
இவர்கள் இருவருமே இப்படி டிக்டாக்கிலேயே விழுந்து கிடப்பதால், கணவன்மார்கள் இவர்களை விட்டு பிரிந்துவிட்டனர். இதனால் இந்த பெண்கள் அவரவர் அம்மா வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் காமெடி, நெகிழ்ச்சி, ஆன்மீகம், காதல் என பல வகை நடிப்புத்திறமைகளை வெளிக்காட்டி டிக்டாக் செய்பவர்கள்.. அதிலும் தாயும் மகளுமாக நடிக்கும் டிக்டாக் வீடியோ ரொம்ப பிரபலம். இதில் தீபாவுக்கு தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்தது. இந்த பெண்ணுக்கு வயது 26!
சுகந்தியின் டிக் டாக் வீடியோக்கள் வித்தியாசமானது.. தனக்கு நிறைய லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய காதலனுடன் செய்யும் சேட்டைகள், நெருக்கங்களையும் டிக் டாக்கில் பதிவிட்டு வந்துள்ளார். இதை பிடிக்காத தீபா சுகந்தியுடன் நட்பை துண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி, இரு தோழிகளின் மானத்தை வாங்க முடிவு செய்தார்.
அதன்படி, தீபா, ரூபாவின் டிக் டாக் வீடியோக்களை டவுன்லோடு செய்து, இருவரையும் விபச்சாரிகளாக சித்தரித்து, சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டார் சுகந்தி. இதை கண்டு இரு பெண்களின் குடும்பத்தினரும் அதிர்ந்தனர்.. இதையடுத்து, தீபாவும், ரூபாவும், ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யவும், தேனி பெண்ணையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, சுகந்தியிடம் இருந்த 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல், வெறும் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, இன்று லைப்பை தொலைத்துவிட்டு நிற்கின்றனர் இந்த அப்பாவி பெண்கள்!