சிங்கப்பூர் துபாயிலிருந்து மதுரை வந்த 35 தமிழர்கள்.. விடுதி, பாதுகாப்பு மையங்களில் தங்க வைப்பு
மதுரை: சிங்கபூர் மற்றும் துபாயிலிருந்த மதுரை திரும்பிய தமிழர்களில் 35 பேர் விடுதிகள் மற்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களில் வைக்கப்படுகிறார்கள். 14 நாடகள் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுகிறார்கள்.
இதனிடையே கொரோனா பரவலால், சிங்கபூர் மற்றும் துபாய்க்கு சென்ற தமிழர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். மத்திய அரசு ஏற்பாட்டின் படி, துபாயிலிருந்து 185 பேரும், சிங்கபூரிலிருந்து 171 பேரும் விமானத்தில் மதுரை வந்தனர்.
இதுவா அரசியல் செய்யும் நேரம்.. கும்புட்டு கேக்கறேன், மாஸ்க் போடுங்க எல்லாரும்.. விஜயபாஸ்கர் உருக்கம்
இந்நிலையில் விமானத்தில் வந்த 356 பேருக்கும் தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் மதுரையில் உள்ள விடுதி, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனா இல்லை என்றாலும் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அதன்பிறகே அவர்கள் வீடு திரும்ப வேண்டும்.