மதுரையில் ஒரே நாளில் 36 லட்சம் பறிமுதல்… பறக்கும் படையினர் அதிரடி
மதுரை: மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 35 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து மதுரை மாவட்டத்தில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட 70 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையில் ஒரே நாளில் 36 லட்சம் பறிமுதல்… பறக்கும் படையினர் அதிரடி #Madurai pic.twitter.com/NJt33VKazN
— Oneindia Tamil (@thatsTamil) March 16, 2019
அவனியாபுரத்தில் 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், திண்டுக்கல் மெயின் ரோட்டில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயும், அழகர்கோயில் சாலையில் 72 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் அவனியாபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மெர்க்கண்டல் வங்கிக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவணங்கள் கொடுத்து பெற்று கொள்ளலாம் என மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார் .