மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்கிங் போயிட்டு வர்றதுக்குள்ள 500 சவரன் கொள்ளை.. அதிர்ச்சியில் தொழிலதிபர்..! இது மதுரை சம்பவம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்கிங் போயிட்டு வர்றதுக்குள்ள 500 சவரன் கொள்ளை, அதிர்ச்சியில் தொழிலதிபர்

    மதுரை: வீட்டின் பூட்டை உடைத்து 500 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரொக்கம் கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மதுரை அருகே காமராஜபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் தங்கவேலு என்பவரின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தங்கவேலுவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

    500 sovereign gold and 9 lakh rupees looted in a house near madurai

    பின்னர் உள்ளேயிருந்த பூட்டை உடைத்து 500 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய தங்கவேலு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனையடுத்து கீரைத்துரை காவல்நிலையத்தில் தங்கவேலு புகார் அளித்தார்.

    அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் இந்த துணிகர கொள்ளை நிகழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    English summary
    500 sovereign Gold and 9 lakh Rupees looted in a house near Madurai. Police filed a case and investigation started.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X