மதுரை தெப்பக்குளத்தை பார்த்து 2 மணி நேரமாக குரைத்த நாய்.. வேகமாக வந்த தீயணைப்பு படை.. என்ன நடந்தது?
மதுரை தெப்பக்குளத்தை பார்த்து நாய் ஒன்று இரண்டு மணி நேரமாக விடாமல் குரைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை: மதுரை தெப்பக்குளத்தை பார்த்து நாய் ஒன்று இரண்டு மணி நேரமாக விடாமல் குரைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மாலைதான் அந்த சம்பவம் நடந்தது. மதுரை தெப்பக்குளம் அருகே நாய்கள் பொதுவாக சுற்றுவது வழக்கம். அதேபோல்தான் நேற்று தெப்பக்குளத்தின் படித்துறையில் நாய்கள் சுற்றி வந்தது.
ஆனால் ஒரு நாய் மட்டும் திடீர் என்று தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை நோக்கி தொடர்ந்து குரைத்து வந்தது. விடாமல் 2 மணி நேரமாக தெப்பக்குளத்தை பார்த்து குரைத்தது.
கொரோனா.. சென்னையை சுற்றி மட்டுமல்ல... கவலை அளிக்கும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்கள்!
சந்தேகம்
பொதுவாக இப்படி நாய் தண்ணீரை பார்த்து குரைத்தால், தண்ணீருக்குள் ஏதாவது இருக்க வாய்ப்புள்ளது. அதாவது உள்ளே யாராவது மூழ்கி இருக்கலாம். அல்லது நாயின் குட்டி உள்ளே சிக்கி இருக்கலாம் . வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருக்கலாம். நாய்களுக்கு உணரும் திறன் அதிகம் என்பதால் தெப்பக்குளத்தை பார்த்து நாய் குரைத்தது சந்தேகத்தை எழுப்பியது.
உள்ளே சென்று தேடினார்கள்
இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் சிலர் தண்ணீருக்கு உள்ளே சென்று தேடினார்கள். நாய் குரைக்கும் பகுதியை நோக்கி சென்று, உள்ளே தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு எங்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் உள்ளே தேடிபார்த்தனர். ஆனால் அந்த குரைப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
தீயணைப்பு படை
இதையடுத்து சந்தேகம் அதிகரிக்கவே உடனே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வேகமாக அங்கே வந்து சோதனைகளை மேற்கொண்டார்கள். 10க்கும் அதிகமான வீரர்கள் அங்கே வந்தனர். குளத்தின் அனைத்து பகுதிக்குள் சென்றும் வேகமாக தேடினார்கள். உள்ளே யாராவது விழுந்து விட்டார்களா, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதா என்று தீவிரமாக சோதனை செய்து இருக்கிறார்கள்.
நீண்ட சோதனை
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சோதனை நீண்டு இருக்கிறது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் உள்ளே எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. குளத்தில் இருந்து எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நாய் அங்கே தொடர்ந்து குரைத்தபடியே நின்று கொண்டு இருந்தது. ஒரு நாயின் குரைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கே வந்ததும், தீவிரமாக தேடுதல் பணிகளை செய்ததும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.