மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை அருகே நடுரோட்டில் வழிமறித்து இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வெட்டிக்கொலை

Google Oneindia Tamil News

மதுரை: அலங்காநல்லூர் அருகே முன் பகை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்த வாலிபர் ஜெயசூர்யா (22) என்ற வாலிபரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை மடக்கி வழிமறித்து தலை, மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சராமரியாக வாலிபர் ஜெயசூர்யாவை அரிவாளால் வெட்டி சாய்த்தது. பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

A youth killed in a two wheeler near Madurai

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிய வாலிபர் ஜெயசூர்யாவை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அந்த வழியாக வந்த தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக வாலிபர் ஜெயசூர்யா இறந்தார்.

மதுக்கரையில் மதுபோதையில் வந்த மருமகன்.. வீட்டுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த பயங்கரம்மதுக்கரையில் மதுபோதையில் வந்த மருமகன்.. வீட்டுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த பயங்கரம்

போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில். முன் பகை காரணமாக வாலிபர் ஜெயசூர்யா வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்த ஜெயசூர்யா மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளதாகவும் ஜாமின் பெற்று வெளியூரில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், இன்று தனது சொந்த ஊருக்கு திரும்பிய போது அவரை வெட்டி படுகொலை செய்து அந்த கும்பல் பழிக்கு பழி வாங்கியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

English summary
Jayasuriya killed in a two wheeler near alanganallur near Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X