மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆலய மணி ஒலிக்க.. ஜோதிபாசு மெட்டி அணிவிக்க.. நம்ம நந்தினிக்கு கல்யாணம்.. சந்தோஷமா வாழ்த்துங்க!

சமூக போராளி நந்தினிக்கு அவரது காதலருடன் இன்று திருமணம் நடைபெற்றது

Google Oneindia Tamil News

Recommended Video

    சமூக போராளி நந்தினிக்கு காதலருடன் எளிய முறையில் திருமணம்-வீடியோ

    மதுரை: மது ஒழிப்புப் போராளி நந்தினிக்கும் அவரது காதலருக்கும் இன்று எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது.

    மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே போராட்டங்களை துவங்கியவர் நந்தினி. குடியின் கொடுமையை நேரில் பார்த்து அனுபவித்த துயரத்தால்தான் நந்தினி குடிக்கு எதிரான போராளியாக உருமாறினார். போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவர் படிப்பை முடித்தார். இப்போது நந்தினி ஒரு வக்கீல்!

    கடந்த 5-ம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பள்ளிக்கால நண்பர் குணா ஜோதிபாசுதான் மாப்பிள்ளை. இந்த கல்யாணத்துக்காக நண்பர்கள், உறவினர்களை நந்தினியும் குணாவும் தங்கள் பேஸ்புக் பதிவில் ஆசையுடன் அழைப்பு விடுத்திருந்தனர்.

    நேத்து செம பாராட்டு.. இன்று பதவியை விட்டுப் போகச் சொல்லி பாட்டு.. திமுகவின் குழப்பம்!நேத்து செம பாராட்டு.. இன்று பதவியை விட்டுப் போகச் சொல்லி பாட்டு.. திமுகவின் குழப்பம்!

    ஜெயில்

    ஜெயில்

    ஆனால் 2014ஆம் ஆண்டு மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு காரணமாக மதுரை சிறையில் அடைத்துவிட்டனர். ஒரு வாரத்தில் கல்யாணம் ஆகும்நிலையில், நந்தினியை தந்தையுடன் ஜெயிலில் அடைத்தது பழிவாங்கும் செயலாக கருதப்பட்டது. அதனால் நந்தினியை விடுதலை செய் என்ற கோரிக்கையுடன் ஹேஷ்டேக்கும் உருவானது.

    வீடியோ

    வீடியோ

    இது சம்பந்தமாக நந்தினியின் காதலனும், "நந்தினி மீது அப்பட்டமாக போடப்பட்ட பழி இது, கண்டிப்பாக பெயிலுக்கு முயற்சிப்போம். 5-ம் தேதி நடக்க உள்ள திருமணத்தை கேன்சல் செய்துவிட்டு, இன்னொரு நாள் கல்யாணத்தை நடத்துவோம்" என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனிடையே தந்தை ஆனந்தன், சகோதரி நந்தினியை விடுவிக்க நந்தினியின் தங்கையும் சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனாவும் கோரிக்கை விடுத்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரையும் போலீசார் கைது செய்தது.

    கல்யாணம்

    கல்யாணம்

    நந்தினியின் கைதுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து நேற்று நந்தினி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கும் அவரது காதலருக்கும் இன்று கல்யாணம் நடந்துள்ளது. கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு எளிய முறையில் இருவரும் கல்யாணம் செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் திருமண உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    உறுதிமொழி

    உறுதிமொழி

    அதில், "இன்று இல்லற வாழ்வில் இணையும் நாங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் இணைபிரியாது ஒற்றுமையுடன் வாழ்வோம் என்றும், இல்வாழ்க்கையிலும், சமுதாய வாழ்விலும் இணைந்து செயல்படுவோம் என்றும் உறுதியேற்று கொள்கிறோம்" என்று தம்பதி இருவரும் கூட்டாக சொன்னார்கள்.

    மெட்டி

    மெட்டி

    இதையடுத்து, நந்தினிக்கு மெட்டி அணிவித்தார் மாப்பிள்ளை ஜோதி. இந்த கல்யாண வீடியோதான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இளம் வயதிலேயே கைது, வழக்கு என பெரிய பெரிய விஷயங்களை சந்தித்து விட்ட நந்தினி, தனது தடைகளை எல்லாம் தகர்த்துவிட்டு, கணவர் ஜோதியுடன் இல்லற வாழ்க்கையுடனும், சமூகப் பாதையிலும் சிறக்க நாம் மனதார வாழ்த்துவோம்.

    English summary
    Activist Nandhini got married her lover Jothi at Madurai Temple today. This Video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X