மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் தீபாவளி முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருது பாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு தீபாவளி பண்டிகையான 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு மதுரையில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட உள்ளது.

all liquor shops will closed from october 27th to 30th in madurai

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 27ம் தேதி சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவுநாளும், 30ம் தேதி இராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.

இதையொட்டி அண்டை மாவட்டமான மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய 4 நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளும் அடைக்கப்படுகிறது.

உருவானது உருவானது "கியார்" புயல்.. தமிழகத்துக்கு ஆபத்து இல்லை.. கர்நாடக கடலோரத்துக்கு கன மழை எச்சரிக்கை

இந்த 4 நாட்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது. மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அக்டோபர் 27, 28, 29, 30 ஆகிய 4 நாட்களும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வர வாய்ப்பு உள்ளது.

English summary
all liquor shops will closed from october 27th to 30th in madurai: madurai collector
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X