கூட்டணி எந்த நேரத்திலும் மாறலாம்.. செல்லூர் ராஜு திடீர் தகவல்
Recommended Video
மதுரை: தேமுதிகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அதிமுக கூட்டணியில் எந்த நேரத்திலும் மாற்றம் வரலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசினார். அவரது பேச்சிலிருந்து...
இன்று தமிழ்நாடு முழுவதும் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம், ரயில் நிலையம், பள்ளிகள், நகரின் முக்கிய இடங்கள், பெண்கள் வேலை செய்யும் செங்கல் சூளைகள் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைத்து சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
தூத்துக்குடிக்கு என்ன செய்வீங்க.. சொல்லுங்க.. கனிமொழியிடம் இன்டர்வியூ நடத்திய ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 மையம் போலியோ சொட்டு மருத்து கொடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் 7 ஆயிரம் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது போக தமிழ் நாடு முழுவதும் ஆயிரம் நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. மதுரையில் 15 நடமாடும் குழுக்கள் செயல்படுகின்றன.
தேமுதிக பொறுத்த வரை முதல்வர், துணை முதல்வர் கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். விரைவில் அவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள்.
கூட்டணி எந்த நேரமும் மாறலாம். ஊடகங்கள் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் கூற முடியாது.
நான் பிரேமலதா விஜயகாந்த் பேசியதை முழுமையாக பார்க்கவில்லை. . மதுரையை பொறுத்தவரை எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்த ஐந்தாண்டுகளில் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. மதுரை நகருக்குள் பேருந்துகள் வராமல் சுற்றுச் சாலை விரிவுபடுத்தும் வேலையும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார் ராஜு.