இந்த 2 பேர் போதும்.. நாங்க ஈஸியா ஜெயிச்சிருவோம்.. டீம் தினகரன் செம நக்கல்!
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை: "திருவாரூரில் ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க 2 பேர் பிரச்சாரம் செய்தாலே போதும், நாங்கள் ஈசியா ஜெயிச்சிடுவோம்" என்று அமமுக ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி எப்போது பேசினாலும், எதை பேசினாலும் அங்கு அதிமுகவை ஒரு "இடி" இடிக்காமல் விட மாட்டார்.
போன வாரம்கூட கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரசியல் அனாதை. கருணாநிதி வீடு பார்த்திருக்கிறோம், போயஸ் கார்டன் வீடு பார்த்திருக்கிறோம், ஆனால் ஜெயக்குமார் வீட்டை போல நாம யாருமே பார்த்திருக்க மாட்டோம்.
ஜெயக்குமார் வீடு
ஒரு மிகப்பெரிய மன்னர் மாளிகை போன்று இருக்கும். ஒரு தெருவில் ஆரம்பித்து, இன்னொரு தெருவில் அவர் வீடு முடியும், எப்படித்தான் அதையெல்லாம் அவர் சம்பாதித்தாரோ?" என்றார்.
பைத்தியம் பிடித்ததுபோல்..
சாதாரணமாகவே புகழேந்தியின் பேச்சு எப்போதுமே இப்படித்தான் பரபரப்பாக இருக்கும். இப்போது இடைத்தேர்தல் நெருங்கிவிட்டதால், பேச்சில் அரசியல் நெடியும் சேர்ந்து அடிக்கிறது. ஒரே ஒரு இடைத்தேர்தலில் ஜெயித்ததற்கே பைத்தியம் பிடித்தவர்கள்போல அதிமுக அமைச்சர்கள் புலம்புகிறார்கள் என்று இதற்கு முன்பே புகழேந்தி தெரிவித்தார்.
தனது பாணியில் பேட்டி
இப்போது திருவாரூர் இடைத்தேர்தலை பற்றியும் தன் பாணியிலேயே கருத்து சொல்லி இருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது:
ஓபிஎஸ், ஈபிஎஸ்
"திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரச்சாரம் செய்தாலே போதும். நாங்கள் ரொம்ப எளிதாக ஜெயித்து விடுவோம், என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கலைஞர் தொகுதி
மேலும் அவர் சொல்லும்போது, "திருவாரூரில் எந்த கட்சியில், யார் போட்டியிட்டாலும் சரி, அவரை எதிர்கொள்ள அமமுக தயாராக உள்ளது. ஆனால் கலைஞர் இடத்தில் யாரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு திருவாரூர் மக்களுக்கு விருப்பம் இல்லை. திருவாரூர் போலவே 18 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் வரவேண்டும்" என்றார்.