மதுரை முழுக்க பறந்து வரும் சிறிய ரக விமானங்கள்.. ஆச்சர்யப்படும் மக்கள்... சூப்பர் முயற்சி
மதுரை: மதுரை மாநகர் பகுதியில் சிறிய ரக விமானங்களில் ஒலிபெருக்கி பொருத்தி கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. மாநகர காவல் துறையின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Recommended Video
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இதனை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல்துறை மூலம் மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய 22 காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் சிறிய ரக விமானங்களில் ஒலிபெருக்கியை பொருத்தி பறக்க விடுகிறார்கள்.
பட்டாசு வெடித்து.. கேக் வெட்டி.. உற்சாக வரவேற்பு.. இவர் எலெக்ஷன்லலாம் ஜெயிக்கல.. என்னானு பாருங்க!
கொரோனா குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்றப்படவேண்டும் நோய் தொற்றில் இருந்து எவ்வாறு காத்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் மாநகர் முழுவதும் இருக்கக்கூடிய பகுதியில் சிறிய ரக விமானம் பறந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது..
மதுரை மாநகர காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய முயற்சிக்கு மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.