பாஜக 300 இடங்களில் வெற்றி பெறும்… தமிழகம், புதுவையில் 40ம் கிடைக்கும்.. பியூஷ் கோயல் பலே பேச்சு
மதுரை: மக்களவைத் தேர்தலில் 300 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று கணக்கெடுப்பு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நாங்கள் அதிமுக, பாமக, தேமுதிக, என மெகா கூட்டணி அமைத்து உள்ளோம் என்றார்.
பிரதமர் மோடி அவர்கள் வலிமையான பிரதமராக தற்போது பணியாற்றி வருகிறார். 300 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று தற்போது வந்த கணக்கெடுப்புகள் வருகிறது.நாட்டின் மீது அக்கறை கொண்டு உள்ளவர்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தலைவர்களும் நாட்டிற்கு பணியாற்றுவதற்கு தயாராக உள்ளனர்.
எங்கள் கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தலைவர்களும், மத்தியில் மோடி அவர்களை மீண்டும் பிரதமராக்குவதற்கு உழைக்க காத்திருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் ஊழலற்ற பொருளாதார வளர்ச்சி, அதனால் தான் மாநில அரசுகளின் துணையோடு ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தினோம். இதை காங்கிரஸ் கட்சியால் அமல்படுத்த முடியவில்லை அதனால் பொறாமைப்படுகிறார்கள்.
ராகுல் காந்திக்கு பொருளாதாரத்தை பற்றி சிறிதளவு ஞானம் இருக்கிறது. ஜிஎஸ்டி கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசுகிறார்கள். தற்போது ஜிஎஸ்டி குறித்து மன்மோகன் சிங் அவர்கள் பாராட்டியது வரவேற்கக் கூடியது. நாளை தொகுதிக்கான இறுதி பட்டியலை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார்.