எங்கெங்கும் தண்ணீர்ப் பஞ்சம்.. குழாய் உடைந்து வீணான லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்.. மதுரையில் அவலம்
Recommended Video
மதுரை: மாநிலத்தில் இன்னும் தண்ணீர் பிரச்சனை இன்னும் நீடிக்கும் நிலையில் மதுரையில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மதுரை முடக்குசாலை பகுதியில் வைகையிலிருந்து அரசரடி நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மெயின் குழாயில் இன்று காலை ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் சாலையில் ஆறுபோல சாலை வீணாக சென்றது.
பல மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் வீணாக சாலையில் ஆறு போல சென்றதை பார்க்கும் போது, மிகுந்த மனவேதனை ஏற்பட்டது.
மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தாமதமாக வருகை தந்த்தால் பல லட்சக்கணக்கான தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வீணாகிவருகிறது. பிரமாண்ட குழாய் என்பதால் சீர்செய்வதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் செய்வதறியாமல் தலைஅளவு தண்ணீரில் மூழ்கியபடி எந்தவித பாதுகாப்பு உபகரணம் இன்றி பணியாற்றிவருகின்றனர்.
Tamil Nadu: Road near Kochadai area water logged after the main water pipeline bursts in Madurai pic.twitter.com/7RcmHGPUnF
— ANI (@ANI) July 18, 2019
தண்ணீரில் மூழ்கியபடி உடைப்பை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர். விநியோகம் நடைபெற்றுவரும் நிலையில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறிவருவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது
சாலையில் சென்ற பொதுமக்களில் பலர் ராட்சத குழாய் உடைப்பை கண்ட மீண்டும் வந்த வழியே திரும்பி சென்றனர் அந்த அளவிற்கு சாலை முழுவதும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் போல சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.