மதுரை அருகே பயங்கரம்.. தாறுமாறாக வந்த கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
Recommended Video
மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டி என்ற கிராமத்தில், நான்கு வழிச்சாலையில் தாறுமாறாக வந்த கார் மோதி பஸ்ஸுக்காக காத்திருந்த நான்கு பேர் பலியானார்கள்.
விபத்தில் பலியான நான்கு பேருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு கார் படு வேகமாக வந்து இவர்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 60 வயது மறத்தி, 37 வயது லட்சுமி, 20 வயது வசந்தி மற்றும் சிறுவன் ஆத்விக் (7 மாத குழந்தை) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நான்கு பேருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் வடுகப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
[பஞ்சாப் ரயில் கோர விபத்து: பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு]
காரை ஓட்டி வந்தவர் காரை விட்டு விட்டுத் தப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. போலீஸார் நான்கு உடல்களையும் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் டயர் வெடித்ததால் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.