மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த முறையும் கமல் வெற்றி.. பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த மதுரை கிளை

Google Oneindia Tamil News

Recommended Video

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

    மதுரை: கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் கூறியதை எதிர்த்து பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.

    Chennai HC Madurai branch rejects to stop Kamals propaganda

    அப்போது தமிழகத்தில் நடந்த சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடாமல் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேட்டனர். அதற்கு மனுதாரர் கமல்ஹாசன் பேசியது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறினார்.

    இதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என அறிவுறுத்தினர். இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள கமல்ஹாசனுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்தார்.

    வாரணாசியில் பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி விட்டிய போலீஸ் வாரணாசியில் பிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி விட்டிய போலீஸ்

    தேர்தல் ஆணையத்தை நாடலாம் என பாஜகவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளை சரவணனின் மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்து அவரது மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிவிட்டது.

    English summary
    Chennai HC Madurai branch rejects to stop Kamal's propaganda citing Delhi HC's directions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X