தேர்தல் வெற்றிக்கு வழி என்ன?... அதிமுக ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
மதுரை: தேர்தல் பிரச்சார யுக்தி, வழிமுறைகள் குறித்து அ.தி.மு.க ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆட்சியை தக்கவைக்க, அதிமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதே நேரம், ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 22 தொகுதிகளின் வெற்றியை வைத்து, தமிழகத்தின் அடுத்தக்கட்ட நகர்வை தீர்மாணிக்கும் என்பதால், மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளாகி உள்ளது.
ஓய்வில்லை.. எத்தனை சுமை வந்தாலும் கவலை இல்லை.. இளைஞர்களின் சுமை தாங்கிக் கல் திருவல்லிக்கேணி!
அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என கூறப்படுவது போல், திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை காலி செய்வோம் என்று அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இதில் பங்கேற்றனர்.
திண்ணை பிரச்சாரத்தை முன்னெடுப்பது, சமூக வலைதளங்களுக்கான ஒருங்கிணைந்த யுக்திகள், தகவல் தொழில்நுட்ப பிரச்சார வழிமுறைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.