மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தடுப்பூசி பாதுகாப்பானது.. நானும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வேன்.. முதல்வர்

Google Oneindia Tamil News

மதுரை: கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, நானும் கொரோனா தடுப்பூசியை நிச்சயம் போட்டுக் கொள்வேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் விளக்கம்

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதே போல் மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

    CM Edappadi Palanisamy says that he will inject Coronavirus vaccine

    ராஜாஜி அரசு மருத்துவமனையின் டாக்டர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என மோடி எடுத்த விடாமுயற்சிக்கு வெற்றியே இந்த தடுப்பூசியாகும்.

    கொரோனா தடுப்பூசியை நான் நிச்சயம் போட்டுக் கொள்வேன். முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்க அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என்றார்.

    English summary
    CM Edappadi Palanisamy says that he will inject Coronavirus vaccine after front line workers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X