மதுரையில் கோலாகலம்.. தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
மதுரை: முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின்113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குருபூஜையை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.
முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் பிரமாண்டமான சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்தார்.
இதன்பிறகு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தி.. 8000 போலீஸ் பாதுகாப்பு.. பசும்பொன்னில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு
பாதுகாப்பு காரணங்களால் மதுரையில் இன்று இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.