பயிற்சி பெண் டாக்டருக்கு பரவிய கொரோனா.. மதுரையில் பரபரப்பு.. ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிப்பு
மதுரை: மதுரையில் பயிற்சி பெண் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
Recommended Video
மதுரை அரசு மருத்துவகல்லூரியில் முதுநிலை படிப்பு முடித்தவர் அந்த, கேரள மாணவி. ஊரடங்கால் கேரளாவிற்கு செல்லமுடியாத நிலையில் பயிற்சி மருத்துவராக மதுரையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று கொரோனா சோதனை நடத்தியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே, மதுரை கொரோனா மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் இருவர், சுகாதாரபணியாளர் 3பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போது டாக்டருக்கும் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 38 நாட்களில் 87பேர் பாதிக்கப்பட்டு 42பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவராக பணியாற்றிய மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கல்லூரி வளாகம், கொரோனா வார்டுகளில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது.