மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு: அமைச்சர் உதயகுமார்
மதுரை: மதுரையில் மையம் கொண்டிருக்கும் மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு என மக்கள் பேசிக் கொள்வதாக தமிழக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புரேவி புயல் இலங்கையில் கரையை கடப்பதாக தகவல் வந்துள்ளது, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆரம்பித்தது பாஜக ஆட்டம்... சிபிஐ விசாரணையில் மகன்...அழகிரி சொல்லும் சட்டசபை தேர்தல் 'பங்கு' என்ன?
தயார் நிலையில் அரசு
புரேவி புயலை எதிர்க்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல்கள் வருவதற்கு முன்னரே முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். புயலால் உயிர் மற்றும் பொருட்கள் சேதம் இல்லாமல் புயலை எதிர்க்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரைக்கு குடிநீர்
கஜா புயலில் 1 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர், நிவர் புயலில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். ரூ 1,295 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து குடிநீர் திட்டத்தை டிச 4-ந் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
உன்னிப்பாக கவனிக்கிறோம்
புதிய திட்டத்தால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும், 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை மதுரைக்கு 3 ஆண்டுகளில் முதல்வர் வழங்கி உள்ளார், புரேவி புயலின் வீரியத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
திமுகவும் அழகிரி புயலும்
புயலின் நிலையை கண்காணித்த பிறகு தான் விடுமுறை குறித்த அறிவிப்பு கொடுக்க முடியும். திமுகவில் ஒரு பூகம்பம் உருவாகும், பூகம்பம் வலுபெறுமா? வலுபெறாதா? என தெரியவில்லை. மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என மக்கள் பேசுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.