மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு வாக்களிப்பதாக நினைத்து வாக்களியுங்கள்.. மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்!

மதுரையில் அதிமுக சார்பாக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    O.Panneerselvam campaign:மகனுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் ஓ.பி.எஸ்

    மதுரை: மதுரையில் அதிமுக சார்பாக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

    தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு திமுக தனது பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது.

    திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை இன்று காலை திருவாரூரில் தொடங்கினார். தற்போது துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

    சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்! சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்!

    தென் மாநிலங்களில் கவனம்

    தென் மாநிலங்களில் கவனம்

    மதுரையில் அலங்காநல்லூரில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடியும் வரை ஓ.பன்னீர்செல்வம் வரிசையாக பல இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். முதற்கட்டமாக மதுரையில் இருந்து தென் மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    ரவீந்திரநாத் பிரச்சாரம்

    ரவீந்திரநாத் பிரச்சாரம்

    இன்று அதிகாலை ஓ.பன்னீர்செல்வமின் பிரச்சாரம் தொடங்கியது. அலங்காநல்லூரில் வீடு வீடாக சென்ற பிரச்சாரம் செய்தார். முதல்முறையாக தேனி வேட்பாளர் ரவீந்திரநாத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்கிறார்.

    யார் இவர்

    யார் இவர்

    தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் ஓ.பன்னீர்செல்வமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சாரத்தில் ரவீந்திரநாத்தும் உடன் இருந்தார். இன்று மாலை ரவீந்திரநாத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன கூறினார்

    என்ன கூறினார்

    எனக்கே வாக்களிப்பதாக நினைத்து என் மகனுக்கு வாக்களிக்க வேண்டும், உங்களிடம் இவரை ஒப்படைக்கிறேன் நீங்கள்தான் இவரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று மதுரை மக்களிடம் கூறி ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

    English summary
    Dept. CM O Paneerselvam starts his campaign in Madurai constituency for his son Raveendranath.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X