டீ விற்பனை செய்யும் பெண்ணுக்கு இலவச தள்ளு வண்டி.. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் செய்த உதவி
மதுரை: கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து லட்சக்கணக்கானோர் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மதுரை, கரும்பாலை இந்திரா நகர் பகுதியை சார்ந்த உமா சல்மா என்ற 26 வயது பெண் தனது குடும்ப வறுமையின் காரணத்தால் தமுக்கம், கோரிப்பாளையம், அண்ணா பஸ்டாண்டு, கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று டீ விற்று வந்துள்ளார்.
கொரோனா பயத்தால் வீட்டு வேலைக்கு யாரும் அழைக்காததால் வேறு வழி தெரியாமல் மறைந்த தனது அப்பாவின் டீ வியாபரத்தை கையில் எடுத்து தெருத்தெருவாக டீ விற்று வருகிறார்.
கடந்த வாரம், "அரசாக பார்த்து தனக்கு சின்ன பெட்டிக் கடை மட்டும் வச்சுக்குடுத்தா போதும். நிம்மதியா பிழைச்சுருவேன். கிடைக்குற வருமானத்தில் கடனையும் கட்டிருவேன்" என வார இதழில் பேட்டி அளித்திருந்தார் உமா சல்மா.
இதனை அறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் எம்எல்ஏ, உமா சல்மாவை சந்தித்து அவரது விருப்பபடியே தள்ளுவண்டி ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளார். மேலும் அவர் விரும்பினால் தனது மருத்துவமனையில் வேலை வழங்கவும் தயார் என்று உறுதியளித்துள்ளார்.
கந்த சஷ்டி கவசம் அவதூறு...மேலும் ஒருவர் புதுச்சேரி போலீசில் சரண்!!