மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன?

மதுரை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை.. பரபரப்பு-வீடியோ

    மதுரை: திமுக பிரமுகர் ராஜா அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை கே.புதூர் ராம வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 47 வயது. திமுக பிரமுகர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர்.. வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    DMK party member murdered near Madurai

    இதை தவிர, சேவல் சண்டையில் நிறைய ஆர்வம் உள்ளவர். இதனால் சுற்றுவட்டாரத்தில் ராஜா என்றால் ரொம்ப பிரபலம்.

    இவர் நேற்றிரவு ஜவகர்புரம் டாஸ்மாக் கடைக்கு சென்று, மது குடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்தது. அவர்களை பார்த்ததும் அதிர்ந்து போன ராஜா, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் அந்த கும்பல் விடவில்லை.

    DMK party member murdered near Madurai

    ராஜாவை சுற்றி வளைத்து கொண்டு எந்த பக்கமும் ஓடவிடாமல் தடுத்து நிறுத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து பிணமானார். தகவல் அறிந்தது கே.புதூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது பாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது

    எதனால் இந்த கொலை நடந்தது என்று உடனடியாக தெரியவில்லை. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே தகராறும், வாக்குவாதமும் நடந்தது. இதில், ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார்.

    இது சம்பந்தமாக ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கும் நடந்து வருகிறது. ஒருவேளை, இந்த விவகாரத்தில் ஸ்ரீதர் தரப்பினர் ராஜாவை பழி வாங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் 4 பேரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். எனினும் இறுதி விசாரணைக்கு பின்னரே ராஜாவின் படுகொலைக்கு உண்மை காரணம் தெரியவரும். ராஜா கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Madurai District DMK Person Raja murdered due to prejudice and police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X