திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும்... அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்றார்.
மேலும், திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்று கூறிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் அதிமுகவை அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கான முழு ஏற்பாடுகளை அதிமுக அரசு செய்து கொடுத்தது என்றும் பதிலளித்த செல்லூர் ராஜூ, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சார்லி சாப்ளினாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
ராஜீவ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தீர்ப்பு.. இது பிரதமருக்கு தெரியாதா- ப. சிதம்பரம் கேள்வி
முன்னதாக, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் நேரத்தில் போட்டி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.