மதுரை அரசு மருத்துவமனையில் தீவிபத்து.. நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம்
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் 227-ஆவது வார்டில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக வயர்களில் தீப்பிடித்துள்ளது.
இதனால் அங்கு, அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீவிபத்து பற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 227-ஆவது வார்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடிருத்திருந்த வயர்களை துண்டித்து உடனடியாக தீயை அணைத்தனர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Comments
English summary
Fire accident in Madurai Rajaji Government Hospital. There is no casualities reported.
Story first published: Wednesday, September 4, 2019, 14:36 [IST]