முதல்ல திருப்புவனம் திருஞானத்துக்கு நாம நன்றி சொல்லியே ஆகணும்..!
அரசு பஸ் கண்டக்டர் திருஞானம் பயணிகளுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி வருகிறார்
மதுரை: முதல்ல திருஞானத்துக்கு நாம் நன்றி சொல்லியே ஆகணும்.. கண்டக்டராக இருந்து கொண்டு, இப்படி ஒரு காரியத்தை மனசார செய்து வருகிறார் திருஞானம்!
கத்தரி கடந்து போனாலும் இந்த வெயிலு நம்மள விட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு போகாது. காலங்காலத்தாலேயே வியர்த்து வழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் குடிக்கிற தண்ணீருக்கு பஞ்சம் வந்துள்ளது.
இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு ஒரு அரிய சேவையை செய்து வருகிறார் திருஞானம். இவர் ஒரு கண்டக்டர்! மதுரை To தஞ்சை செல்லும் அரசு பேருந்தில்தான் வேலை பார்க்கிறார். திருப்புவனத்தை சேர்ந்தவர். வயசு 45 ஆகிறது.
மோடி பதவியேற்புக்கு குவியும் 6000 விஐபிகள்.. நேற்றே சமையல் ஆரம்பம்.. அசத்தல் மெனு இதுதான்
டிக்கெட்
சீட்டை விட்டு எழுந்து வந்து பயணிகளுக்கு டிக்கெட்டே தராத நிறைய கண்டக்டர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு கூட்டமானாலும், பயணிகள்தான் கண்டக்டரிடம் சென்று பஸ் டிக்கெட்டை வாங்கி கொள்வதும் ஆங்காங்கே நடக்கிறது.
குடிநீர்
ஆனால், திருஞானம் அப்படி இல்லை.. பயணிகளுக்கு டிக்கெட் தருவது அவரது டியூட்டி என்றாலும், கூடவே பயணிகளுக்கு குடிக்க தண்ணீரும் தருகிறாராம்.
60 லிட்டர்
இது வெயில் காலம் என்பதால், பஸ்ஸில் ஏறும் பெரும்பாலானோர் தாகத்தின் பிடியில்தான் இருப்பார்கள். அதற்காக எல்லாராலும் வாட்டர் பாட்டில் தூக்கி கொண்டு போகவும் முடியாது. இது மாதிரியான பயணிகளுக்குதான் குடிக்க தண்ணீர் தருகிறாராம் திருஞானம். அதுவும் தினமும் 60 லிட்டர் வரை இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்துவருகிறார்.
|
திருபுவனம் திருஞானம்
இந்த காரியத்தை அந்த பஸ்ஸில் சென்ற ஒருவர் போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மதுரை To தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் பயணிகளுக்கு தினமும் 60 லிட்டர் வரை இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்துவரும் அந்த பேருந்தின் நடத்துனர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த திருஞானம்(45). தாகம் தீர்க்கும் தங்க குணம் நற்செயல் நெஞ்சம் நெகிழ வைக்கிறது வாழ்த்துகள் அண்ணா" என்று பதிவிட்டுள்ளார்.