மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடை விடாது இடிமின்னலுடன் மதுரையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் வெள்ளம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் இன்று மாலை இடிவிடாது பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

heavy rain fall in madurai, roads flooded

இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் மதுரையில் இன்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரம் இடைவிடாது இடிமின்னலுடன் கனமழை பெய்தது.

நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் புல்புல் புயல்.. கொல்கத்தா விமானநிலையம் மூடல்நாளை அதிகாலை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் புல்புல் புயல்.. கொல்கத்தா விமானநிலையம் மூடல்

இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வெள்ளநீர் வடிய வழியில்லாமல் 2 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இந்த திடீர் மழையால் மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் மக்கள் ஒரு பக்கம் சந்தோசப்பட்டாலும் மறுபக்கம் கடும் அவதி அடைந்தனர்.

English summary
heavy rainfall in salem, streets and houses flooded , people faced difficult in many places of maurai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X