மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி முதல்வராக இறக்க கூடாது என்று நினைத்தேன்.. அதில் வெற்றியும் பெற்றேன்.. சீமான் பரபர

சாகும் வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை முதல்வராக விடாமல் பார்த்துக் கொண்டது நான்தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: சாகும் வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை முதல்வராக விடாமல் பார்த்துக் கொண்டது நான்தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நேற்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் இந்த கூட்டம் அதிகம் முக்கியத்துவம் பெற்றது. நேற்று இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு அதிக கவனம் ஈர்த்தது.

தன்னுடைய பேச்சு முழுக்க சீமான், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவை எப்போதும் ஆட்சியில் அமர விட மாட்டேன் என்று சீமான் குறிப்பிட்டார்.

சீமான் எப்படி

சீமான் எப்படி

சீமான் தனது பேச்சில், முதல்வர் பதவியில் இருக்கும் போது கருணாநிதி இறந்துவிட கூடாது என்று நினைத்தேன், அவர் முதல்வர் பதவியில் இருந்து உயிர் விட கூடாது. அதனால் கடைசி காலத்தில் அவரை முதல்வராக விட கூடாது என்று பாடுபட்டேன். இதற்காக கடுமையாக உழைத்தேன். தேர்தல் பணிகளை செய்தேன்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

கடைசியில் நான் அதில் வெற்றியும் பெற்றேன். அவர் இறக்கும் போது முதல்வராக இல்லை. அவரை கடைசிவரை முதல்வராக விடாமல் பார்த்துக்கொண்டேன். கருணாநிதி திரும்பவும் முதல்வர் ஆகாமல் இருந்ததற்கு நான் தான் காரணம். திமுக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது.

தமிழர்கள் எப்படி

தமிழர்கள் எப்படி

தமிழர்கள் விநோதமானவர்கள். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். ஆம் அது உண்மைதான். அதில் எந்த தவறும் கிடையாது. வன்முறைக்கு பதிலடி வன்முறைதான்.

 தமிழர்கள் எதிர்காலம்

தமிழர்கள் எதிர்காலம்

நாம் தமிழர் கட்சிதான் தமிழகத்தின் எதிர்காலம். விரைவில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் இருந்து அழிந்துவிடும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்தால் நீங்கள் வாழலாம். இல்லையென்றால் நீங்கள் சாக வேண்டியதுதான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், என்று சீமான் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
I am the reason for DMK Karunanidhi not dying as Chief Minister says Seeman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X