சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்.. ரஜினியை வைத்து பாஜக சினிமா வேண்டுமானால் செய்வார்கள்.. கமல்ஹாசன்
மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Recommended Video
வரும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது.
இதில் அந்த இரு ஜாம்பவான்களுக்கு இருந்த மக்கள் செல்வாக்கை தங்கள் வசம் கொண்டு வர அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. அது போல் நாம் தமிழர் கட்சியினர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், ரஜினியின் புதிய கட்சி என தேர்தல் களம் காணவுள்ளனர்.
பாருங்க.. அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் ஜெயிக்கும்- திருச்சியில் மோடி சகோதரர் பேட்டி
கூட்டம்
இந்த நிலையில் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் நேற்றைய தினம் மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரையில் பல்வேறு இடங்களுக்கு சென்ற கமல்ஹாசனுக்கு சென்ற இடத்தில் எல்லாம் கூட்டம் அலைமோதியது.
தொகுதி
இன்றைய தினம் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில் இந்த சட்டசபை தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும். அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக நான் கருத்து சொல்லமாட்டேன் நான் நாத்திகவாதி அல்ல, பகுத்தறிவுவாதி.
மாநகரம்
ஒரு நகரம் மாநகரமாக மாற கார்ப்பரேட் நிறுவனங்கள் அவசியம். எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் தேவையற்றது என்பது மடமை ஆகும். ஆனால் சிறு குறு தொழில் , கார்ப்பரேட் சமமாக இருக்க வேண்டும். மேல்மட்டத்தில் இருந்து தொடரும் ஊழலை ஒழிப்பதே பிரதான நோக்கம்.
தூக்கம்
அரசியல் பயணம் என்பது லட்சியத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் உள்ளனர் என்றார் கமல்.
ரஜினி
ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா என கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் கூறுகையில் ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன். ரஜினியை வைத்து சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என்றார் கமல்ஹாசன்.