மனைவியுடன் கள்ளக்காதல்.. உயிர் நண்பனே உயிரை எடுத்தார்.. மதுரையில் வழக்கறிஞர் கொலை
மதுரை: கள்ள காதல் விவகாரத்தில் வழக்கறிஞரை அவரது நண்பரே அடித்து கொன்று உடலை வைகையாற்றில் வீசிச் சென்றிருக்கிறார்கள். இதில் கொலையாளிகள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சாலை அருகே துவரிமான் வைகையாற்றங்கரையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் (எ) தேவா கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்
தகவல் அறிந்து அங்கு சென்ற நாகமலை புதுக்கோட்டை போலீசார் சாக்ரடீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக மதுரை அரசு ராஜாஜி மருந்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்
இன்று உலக பிரியாணி தினம்.. ஆஹா கடைகளில் அலைமோதும் கூட்டம்.. பாஸ்! பீஸ் பெரிசா வைங்கனு அக்கப்போர்!
கொலை வழக்கு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த சாக்ரடீஸ் (எ) தேவா மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வழக்கு சம்மந்தமாக மதுரை நீதிமன்றத்திற்கு ஆஜராக மதுரை வந்தபோது தனது நண்பரான செந்தில் என்பவர் மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்
அடித்துக்கொலை
இதில் மதுபோதையில் செந்தில் தனது மனைவியுடன் தகாத உறவில் சாக்ரடீஸ் இருந்ததை கூறி வாக்கு வாதம் செய்துள்ளார். உன்னால் தான் என் மனைவி நிரந்தரமாக என்னை விட்டு பிரிந்தார .இதற்கு நீ தான் காரணம் என கூறி சாக்ரடீசை அடித்து கொலை செய்திருக்கிறார் செந்தில். இதற்கு அவரது நண்பர் சையது ஜாபர் உடந்தையாக இருந்துள்ளார்.
விசாரணையில் அம்பலம்
இருவரும் இறந்த சாக்ரடீஸ் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று சோழவந்தான் சாலை துவரிமான் பகுதி வைகை ஆற்றங்கரையோரம் உடலை வீசிச் சென்றிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து செந்தில் மற்றும் சையது ஜாபர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நண்பனே உயிரை எடுத்தது
கள்ள காதல் விவகாரத்தில் தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்ததால் வழக்கறிஞரான தனது நண்பனை உயிர் நண்பனே அடித்து கொலை செய்து உடலை வைகையாற்றங் கரையோரத்தில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.