திமுகவில் விரைவில் மாற்றம் வரும்.. எல்லாம் சரியாகும்.. மு.க அழகிரி பரபரப்பு பேச்சு!
உண்மையாக திமுகவில் உழைத்தவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள் என்று திமுக கட்சி குறித்து அதன் முன்னாள் உறுப்பினர் மு.க அழகிரி பேட்டியளித்து இருக்கிறார்.
மதுரை: உண்மையாக திமுகவில் உழைத்தவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள் என்று திமுக கட்சி குறித்து அதன் முன்னாள் உறுப்பினர் மு.க அழகிரி பேட்டியளித்து இருக்கிறார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக முன்னாள் எம்.பி மு.க அழகிரி திமுக குறித்து பேசினார். திமுகவில் ஜனநாயகமே இப்போது இல்லை என்று அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
திமுக மீது அழகிரி கடுமையான விமர்சனங்களை வைத்தார். விரைவில் திமுகவில் மாற்றம் ஏற்படும் என்று அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிவகங்கையை பாலைவனமாக மாற விடமாட்டோம்... கவிஞர் சினேகன் பிரச்சாரம்
என்ன சொன்னார்
மு.க அழகிரி தனது பேச்சில், திமுகவில் மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் எதோ சம்பளம் வாங்கும் பணியாளர்கள் போல நடத்தப்படுகிறார்கள். பழைய திமுக கட்சி போலவே இப்போது திமுகவில் யாரும் செயல்படவில்லை. முன்பு எல்லாம் இப்படி இல்லை.
முன்பு
முன்பு, கட்சியில் மாவட்ட செயலாளர்களுக்கு நிறைய மதிப்பு இருந்தது. கட்சி சார்பாக அவர்கள் நிறைய பணிகளை செய்து கொண்டு இருந்தார்கள். கட்சியும் வளர்ந்து கொண்டே இருந்தது. அப்போது அவர்களுக்கு எல்லாம் ஒரு மாஸ் இருந்தது.
இப்போது என்ன
தற்போது உள்ள மாவட்ட செயலாளர்கள் பினாமிகள் போல் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை எல்லாம் மாற வேண்டும். கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை.
உண்மை என்ன
உண்மையாக இங்கு உழைத்தவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். இப்போது எதுவும் செய்யாதவர்கள் பதவியை பெற்று இருக்கிறார்கள். விரைவில் அந்த மோசமான சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்று அழகிரி தனது பேச்சில் குறிப்பிட்டார்.