மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கீழடிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த சு.வெங்கடேசன்.. மதுரையில் அதிரடியாக களமிறக்கிய சிபிஎம்!

கீழடி அகழாய்வு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதி வேட்பாளராக சிபிஎம் மூலம் நிறுத்தப்பட்டு உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் அதிரடியாக வேட்பாளரை களமிறங்கிய சிபிஎம்- வீடியோ

    மதுரை: கீழடி அகழாய்வு குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன், மதுரை தொகுதி வேட்பாளராக சிபிஎம் மூலம் நிறுத்தப்பட்டு இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவையில் பி.ஆர் நடராஜன் போட்டியிடுகிறார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் பல்வேறு கட்டுரைகளை, கதைகளை எழுதிய பிரபல எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிபிஎம் கட்சியின் கோவை, மதுரை வேட்பாளர்கள்.. களமிறங்கும் பி.ஆர் நடராஜன், சு.வெங்கடேசன்! சிபிஎம் கட்சியின் கோவை, மதுரை வேட்பாளர்கள்.. களமிறங்கும் பி.ஆர் நடராஜன், சு.வெங்கடேசன்!

    சு.வெங்கடேசன் கீழடி

    சு.வெங்கடேசன் கீழடி

    மதுரையில் இருந்து 12 கிமீ தொலையில் இருக்கும் கீழடி தொடர்பாக நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தவர்தான் எழுத்தாளர் சு.வெங்கடேசன். இது தொடர்பாக இவர் நிறைய ஆய்வு கட்டுரைகளை எழுதி இருக்கிறார். கீழடியின் உண்மையான வரலாறு என்ன, அங்கு கிடைக்கும் பொருட்களின் மகத்துவம் என்ன என்று நிறைய கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

    களமிறங்கி வேலை

    களமிறங்கி வேலை

    அதேபோல் மதுரையை சுற்றி கிராமம் கிராமமாக நிறைய ஆய்வுகளை இவர் செய்து இருக்கிறார். கீழடி ஆய்வுக்காக இவர் பல மக்களை சந்தித்து உள்ளார். கீழடி மட்டுமில்லாமல் மதுரையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக பகுதிகளை தொடர்ந்து தன்னுடைய எழுத்துக்களில் இவர் ஆவணப்படுத்தி வந்துள்ளார்.

     முக்கியமான எழுத்தாளர்

    முக்கியமான எழுத்தாளர்

    சு.வெங்கடேசனுக்கு இது முதல் தேர்தல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் இவர் தேர்தல் களம் அறிந்து செயல்படுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி இங்கு யாரை நிறுத்தும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உருவெடுத்து இருக்கிறது.

    முக்கியத்துவம் பெறும்

    முக்கியத்துவம் பெறும்

    தொடர்ந்து தமிழ் மொழி, இன வரலாற்றில் மத்திய அரசு மெத்தன போக்கு காட்டி வருகிறது. அகழ்வாராய்ச்சி நடத்த கூட வழக்கு தொடுக்க வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது. இந்த நிலையில் வரலாறு தெரிந்த ஒருவர் இங்கு தேர்தலில் நிற்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    English summary
    Lok Sabha Elections 2019: CPM Madurai candidate Writer S. Venkatesan will play a major role in Keezhadi research.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X