அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்... செல்லூர் ராஜூ பேச்சு
மதுரை: எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றபோவது, மத்திய அரசின் சிறந்த திட்டம் என்று பாராட்டு தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டி அடிமட்ட தொண்டர் ஆவார். அவரது பணியை கருத்தில் கொண்டு முதல்வரும், துணை முதல்வரும் வாய்ப்பு வழங்கியுள்ளனர். அ.தி.மு.க.வில் தான் அடிமட்ட தொண்டனுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும் என்று கூறினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் நேரத்தில் போட்டி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்றார்.
தோல்வி பயம்.. வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறுகின்றனர்... எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்
மக்களுக்கான தேவையை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. மக்களுக்கான நிறைய திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளோம். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது, எங்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது . எனவே அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெற வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.