எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே
மதுரை: மதுரையில் அரசியல் பிரமுகரின் பிரமுகரின் இறப்பை தாங்க முடியாத அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் எனபோஸ்டர் ஓட்டி உள்ளார்கள். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக பேமஸாக உள்ள விஷயம் என்றால் போஸ்டர்களும் பேனர்களும் . கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, வசந்த விழா, கோயில் திருவிழா என பொதுமக்கள் தங்கள் விழாக்களில் போஸ்டர் அடித்து பேனர் அடித்து மகிழ்வார்கள்.
இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்களின் இல்ல திருமண விழாக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் என பேனர்கள் களைகட்டும். பேனர்களில், போஸ்டர்களில் வரும் வசனங்களில் பொறி பறக்கும். எப்படி இப்படி டிசைன் டிசைனாக யோசிக்கிறார்கள் என்று பார்ப்போருககு தலையே சுற்றிவிடும்.
இதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்
இந்நிலையில் மதுரை வடக்குமாசி பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் 51வது வட்ட திமுக பிரதிநிதியாக இருக்கிறார் இவரின் தந்தை அய்யாவு என்பவர் கடந்த 25 ஆம் தேதி காலை 11.45 மணிக்கு காலமானார். இவரது இறப்பை தாங்கமுடியாத அவரது ஆதரவாளர்கள் எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டி உள்ளார்கள்.. அந்த போஸ்டரில், சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம் என்று அச்சடித்து அப்பகுதி மக்களை பரபரப்புக்குள்ளாக்கி உள்ளார்கள். அந்த ஏரியாவே செத்தவருக்காக ஒட்டப்பட்ட போஸ்டரை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்