மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி

மதுரை பைனான்சியர் ராஜா கொல்லப்பட்டதன் பின்னணி வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக பிரமுகர் ராஜா வெட்டி படுகொலை, மதுரையில் பரபரப்பு- வீடியோ

    மதுரை: பழிக்கு பழி வாங்கவே, பைனான்சியர் ராஜாவை.. ஓட ஓட வெட்டி கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சேவல் சண்டையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொடூர கொலைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

    மதுரை கே.புதூர் ராம வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 47 வயது. திமுக பிரமுகர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர்.. வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இதை தவிர, சேவல் சண்டையில் நிறைய ஆர்வம் உள்ளவர். இதனால் சுற்றுவட்டாரத்தில் ராஜா என்றால் ரொம்ப பிரபலம்.

    ரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்! ரூம் போட்டு ஜாலி.. கல்யாணம் செய்வதாக ஏமாற்றி.. 17 வயது சிறுமியை பஸ் ஸ்டேண்டில் தவிக்க விட்ட இளைஞர்!

    கும்பல்

    கும்பல்

    இவர் நேற்று முன்தினம் இரவு ஜவகர்புரம் டாஸ்மாக் கடைக்கு சென்று, மது குடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து கொண்டது. ராஜாவை நாலாபுறமும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

    வீடியோ

    வீடியோ

    இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து பிணமானார். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து கே.புதூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    4 பேர் கைது

    4 பேர் கைது

    எதனால் இந்த கொலை நடந்தது என்று உடனடியாக தெரியாமல் இருந்த நிலையில், இக்கொலை தொடர்பாக மதுரை, புதூர் ராம்வர்மா நகரைச் சேர்ந்த நிஜாம்முகைதீன், கார்த்திக் (எ) குட்டை கார்த்திக், தவ்பீக், ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது. விசாரணையில், இந்த கொலை பழிக்குப்பழியாகவே நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஸ்ரீதர்

    ஸ்ரீதர்

    கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே தகராறும், வாக்குவாதமும் நடந்தது. இதில், ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக ராஜா மீது குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஸ்ரீதர் தரப்பினர் ராஜாவை பழி வாங்கி உள்ளனர். கொலையான ஸ்ரீதரின் நண்பரான கார்த்திக் (எ) குட்டை கார்த்திக் உள்ளிட்ட சிலர்தான் ராஜாவை கொன்றுள்ளனர். இதனால் விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இதை பற்றி கைதானவர்கள் சொல்லும்போது, "ஒரு வாரமாகவே ராஜாவை வீட்டிலும் அவர் கடையிலும், போகிற இடமெல்லாம் ஃபாலோ செய்தோம். அப்பறம்தான் கடந்த 21-ம் தேதி நைட் கொலை செய்தோம்" என்றனர். ஆனால் இந்த கொலையில், முன்விரோதம் மட்டும்தான் காரணமா அல்லது கொடுக்கல் வாங்கலில் இந்த கொலை நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

    English summary
    Madurai DMK Person and Financier Raja murdered by the 4 people due to Prejudice. Police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X