மாப்ளே.. நான் ரெடி.. நீ ரெடியா.. ஜல்லிக்கட்டு டோக்கன் வாங்கிவிட்டு கண் சிமிட்டும் காளைகள்!
Recommended Video
மதுரை : அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு இன்று துவங்கியது. டோக்கன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் முதல் நாளான பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு பணிகள் துவங்கியது.
காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு முதலே காலை உரிமையாளர்கள் அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் குவிய தொடங்கினர். காலையில் முன்பதிவிற்கு ஒரு நபருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும். என்றும் கால்நடை மருத்துவர் வழங்கிய சான்று, கால்நடைகளுக்கான அடையாள சான்று, டிடி மற்றும் கால்நடை உரிமையாளரின் ஆதார் அட்டை கைபேசி எண் ஆகியவை கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான பேர் கூடியிருந்தனர் இதில் பெண்களும் கலந்து கொண்டனர் தங்களை முன்பதிவு செய்ய பெண்கள் கலந்து கொண்டனர்.
கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உதவி இயக்குனர் எம் எஸ் சரவணன் சரவணன் தலைமையில் 16 பேர் கொண்ட குழுக்கள் முன்பதிவு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கான பாதுகாப்பு பணியில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் டோக்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.