மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரையில் விபத்தில் சிக்கி தலையில் காயம்.. அழுகிய தலையுடன் முதியவர் மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் அழுகிய தலையுடன் அவதிப்பட்டு வந்த முதியவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் செல்லூரில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டபாணி. இவர் சிறு வயதிலிருந்தே அந்தப் பகுதியில் உள்ள தெருக்களில் வசித்து வந்துள்ளார்.

உறவினர் யாருமில்லாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தறி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அக்கம்பக்கத்தினர் தரும் உணவை சாப்பிட்டு விட்டு அந்த பகுதியில் சாலையோரம் மற்றும் திண்ணையில் படுத்து உறங்கி வந்துள்ளார்.

மொத்தம் 10.. சென்னை, மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்.. கொரோனா பலி எண்ணிக்கையில் சந்தேகம் மொத்தம் 10.. சென்னை, மதுரை தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ்.. கொரோனா பலி எண்ணிக்கையில் சந்தேகம்

விபத்து

விபத்து

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கால் நெசவுத் தொழில் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டதால் சரிவர வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் முதியவருக்கு உணவு கொடுத்து வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உணவு கொடுக்க

உணவு கொடுக்க

இந்த நிலையில் மருத்துவமனை செல்ல யாரும் இல்லாததால் அந்த காயம் பெரிய அளவில் மாறி தலையின் இடது புறம் முழுமையாக அழுகி நீர் வடிய தொடங்கியது. இதனால் முதியவருக்கு அருகே துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதி மக்கள் யாரும் அவரின் அருகே செல்வதையும் உணவு கொடுப்பதையும் நிறுத்தி விட்டனர்.

தகவல்

தகவல்

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் மற்றும் மதுரையைச் சேர்ந்த இதயம் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தனர்.

முதியவர்

முதியவர்

தகவலறிந்து வந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிவக்குமார் தலைமையிலான குழுவினர் முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று உடனிருந்து கவனித்து வருகிறார்கள். தான் காயம் அடைந்ததை யாரிடமாவது சொல்லியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என ஊர் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

English summary
Abandoned Old man in Madurai met with an accident and not able to go to hospital, as a result a part of his head gets rotten.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X