"டேய் கார்த்தி.. எனக்கு எல்லாமே நீதான்டா.. ஏன் இவ்ளோ கஷ்டப்படுத்தறே.. டிக்டாக்கில் புலம்பும் திவ்யா
காதலனை டிக்டாக் வீடியோ மூலம் தேடி வருகிறார் திவ்யா
Recommended Video
மதுரை: "டேய் கார்த்தி.. உனக்கே தெரியும்டா நான் உண்மையா இருந்தது.. என்னை இவ்ளோ கஷ்டப்படுத்தி பார்த்துட்டே.. நீ என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை, ஏன் அத்தை பொண்ணே.. நீதான் அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா? மாமா, மாமான்னு நீ லவ் பண்றியா? அது நடக்காது" என்று பிரிந்து போன காதலனுக்காக இளம்பெ ஒருவர் கண்ணீர் வீடியோ பதிவிட்டுள்ளார்.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்.. இவரிடம் காதல் வலையில் திவ்யா என்ற இளம்பெண் ஒருவர் விழுந்துள்ளார்.
இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர்.. பிஎஸ்சி பட்டதாரியும்கூட.. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார்.. அதனால் அவரும் திவ்யாவை காதலித்தார்.
உச்சம்
திவ்யா அஜித் ரசிகை.. கார்த்திக் விஜய் ரசிகர்.. இந்த மோதல்தான் காதலாக ஆரம்பமானது.. இருவருமே காதலின் உச்சத்தில் இருந்தனர்.. அப்போது திடீரென திவ்யா டிக்டாக்கில் ஆபாச, கிளாமர் டிக்டாக் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது... இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் காதலையும் முறித்து கொண்டுள்ளார்.. மேலும் காதலியை பார்ப்பதும், பேசுவதையும் தவிர்த்துள்ளார்.
கண்ணீர் வீடியோ
அன்று முதல் இப்போது வரை பல, பல வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட்டு காதலனை திவ்யா தேடி வருகிறார்.. ஒரு கட்டத்தில் மிரட்டல் வீடியோக்களையும்விட ஆரம்பித்துள்ளார். அதில் ஒரு வீடியோவில் ஆவேசமாக, கையில் பெட்ரோல் கேனை வைத்து கொண்டு... கண்ணீருடன் திவ்யா பேசுவதாவது: "என் முடிவு இதுதான்.. சரியா.. நான் போய் மதுரையில கம்ப்ளைண்ட் பண்ண போனேன்.. ஆனால் என் கேஸை யாருமே எடுத்துக்கல.
அத்தை பொண்ணே
என் ஊர்ல இருந்து கொடுத்தாலும் மதுரைக்கு போ-ன்னு போலீஸ் ஸ்டேஷனில் அலைய விடறாங்க. அதனால நான் கலெக்டர் ஆபீஸ் போறேன்.. கலெக்டர் ஆபீஸ் முன்னாடி போய், நான் பெட்ரோல் ஊத்தி கொளுத்திக்க போறேன். நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லை, செத்துடுவேன்னு.. என் கார்த்திதான் எனக்கு எல்லாமே.. டேய் கார்த்தி.. உனக்கே தெரியும்டா நான் உண்மையா இருந்தது.. என்னை இவ்ளோ கஷ்டப்படுத்தி பார்த்துட்டே.. நீ என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை, ஏன் அத்தை பொண்ணே.. நீதான் அவனை கல்யாணம் பண்ணிக்க போறியா?
மாமா.. மாமா
மாமா, மாமான்னு நீ லவ் பண்றியா? நான் அவனை முழுசா லவ் பண்ணிட்டு இருக்கேன், நீ இப்போ வந்து கரெக்ட் பண்ணிட்டு போலாம்னு பார்க்கறியா? இதெல்லாம் நடக்கவே நடக்காது, சரியா? அவனுக்கு நான்தான்.. யாரும் எங்களுக்கு இடையில் வர முடியாது... பேசி பஞ்சாயத்து பண்ணி கேஸில் இருந்து என்னை வாபஸ் வாங்க வெக்கறீங்களா? இது எங்க ஏரியா? சாகதான்டா போறேன்.. அந்த பொண்ணு எப்படி உன்னை கட்டறான்னு நான் பார்க்கிறேன்" என்று அழுதுகொண்டே பேசுகிறார்.