கர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்!
மதுரை: கர்ப்ப பையில் நீர் கட்டிஇருந்ததால் கரைப்பதற்கு ஜிம்முக்கு போன கனிமொழி என்ற பெண்ணுக்கு, ஜிம் மாஸ்டருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவருடன் மாயமானார். இதனால் கனிமொழியின் கணவர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 26). ராஜேஷ் கனிமொழி என்பவரை மூன்று வருடங்களுக்கு காதலித்து திருமணம் செய்தார்.
ராஜேஷ் தற்போது மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.
பொதுச்செயலாளர் பதவி... முதல்வர் வேட்பாளர்-களேபரங்களுக்கு காத்திருக்கும் அதிமுகவின் நாளைய செயற்குழு!
கர்ப்பபையில் கட்டி
ராஜேஷ் -கனிமொழி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கனிமொழிக்குக் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் கனிமொழி, கர்ப்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டி கரைப்பதற்காக ஜிம்மிற்கு சென்றார்.
காதலை கைவிட மறுப்பு
மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவர் நடத்தும் ஜிம்மில் சேர்ந்து கனிமொழி உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். அங்கு யோகேஷ் கண்ணாவிற்கும், கனிமொழிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன் ராஜேஸிற்கு தெரியவர, அவர் இதெல்லாம் சரிவராது யோகேஷ் கண்ணாவுடனான பழக்கத்தைக் கைவிடுமாறு கண்டித்திருக்கிறார்.
செல்போனில் பேச்சு
இந்நிலையில் கனிமொழி யோகேஷ் கண்ணாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசியதை, கணவன் ராஜேஷ் கண்டித்தார். இதனால் வீட்டை விட்டு வெளியேற முயன்ற கனிமொழி முயன்றிருக்கிறார் இதையும் ராஜேஷ் தடுத்துள்ளார். இதுகுறித்து தெரியவர ஜிம் மாஸ்டர் யோகேஷ் கண்ணா தனது நண்பர்களுடன் வந்து, ராஜேஷின் வீடுபுகுந்து மிரட்டிவிட்டு கனிமொழியை தூக்கிச் சென்றாராம்.
மனைவியை மீட்டு தாருங்கள்
இதனால் உடைந்து போன ராஜேஷ், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "யோகேஷ் கண்ணா தன்னை தொடர்புகொண்டு, என் மனைவியைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் மிரட்டுகிறார். என் மனைவியை மீட்டுத்தாருங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி வினோதினி, ராஜேஷ், அவரது மனைவி கனிமொழி, மற்றும் உடற்பயிற்சி கூட உரிமையாளர் யோகேஷ் கண்ணன் ஆகியோரை அழைத்து விசாரித்தார். கர்ப்பபை கட்டியை கரைக்கச் சென்ற பெண்ணை, ஜிம் மாஸ்டர் கவர்ந்து சென்றது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.