மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு!

போலீசாரை கத்தியால் தாக்கி.. தப்பி ஓடிய கிரிமினலுக்கு வலை வீசப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மதுரை: படக்கென போலீசாரின் கழுத்து, கைகளில் கத்தியால் கிழித்து விட்டு, டக்கென ஜீப்பில் இருந்து குதித்து தப்பி ஓடி உள்ளான் கிரிமினல் ஒருவன்!

மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் துரைப்பாண்டி என்கிற பாண்டி. வயது 26 ஆகிறது. மதுரை சுற்றுவட்டாரத்தில் கைதேர்ந்த திருடன்.

man attacked police and escaped in kovai

வழிப்பறி, டூவீலர் திருட்டு என ஏகப்பட்ட வழக்குகள் பாண்டி மீது உள்ளன. மதுரை தவிர, திருப்பூர், கோயம்புத்தூர் போன்று மாவட்டம் விட்டு மாவட்டமும் கைவரிசையை காட்டி உள்ளான் பாண்டி.

இதனால் இந்த மாவட்ட போலீசார், பல்வேறு வழக்குகளில் இவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இறுதியில் ஒரு திருட்டு வழக்கில் சூலூர் போலீசார் பாண்டியை சுற்றி வளைத்து கைது செய்துவிட்டனர்.

அவனை பிடித்து கொண்டு கோர்ட்டுக்கு செல்லும்போது, போலீசாரின் பிடியில் இருந்தே திடீரென ஓடும் ஜீப்பில் இருந்து குதித்து.. எஸ்கேப் ஆனான் பாண்டி. இதை போலீசார் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதனால் பாண்டியை போலீசாரும் விரட்டி பிடிக்க ஆரம்பித்தனர். அப்போது கையில் வைத்திருந்த கத்தியால், பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கழுத்து மற்றும் கைகளில் கிழித்து விட்டு பாண்டி தப்பி விட்டான்.

இதனால் பாண்டியை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக பாண்டியின் போட்டோக்களையும் வெளியிட்டு, "இவனை எங்கு பார்த்தாலும் பிடித்து எனக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று சொல்லி Tr. Balamurugan 9498102041,8072087450 என்ற எண்ணையும் பகிர்ந்துள்ளனர்.

போலீஸார் தேடி வரும் வேகத்தைப் பார்த்தால் துரைப்பாண்டியை சீக்கிரமே மாவுக்கட்டுக்குள் போய் தேட வேண்டி வரும் போல தெரிகிறது!

English summary
young man attacked the police and escaped from them in kovai and police released his photo now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X