ஜாக்கெட், புடவை, தலையில் பூ.. சாயந்தரமாச்சுன்னா.. மறைவிடம் தேடி ஓடும் ராஜாத்தி.. இது வேற லெவல்!
மதுரை: சாயங்காலம் ஆகிவிட்டால், ஜாக்கெட், புடவை, தலையில் பூ.. என மறைவிடத்துக்கு ஓடுகிறார் அவர்.. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், அவரது கோலமே வேறு!
அந்த நபரின் சொந்த ஊர் மானாமதுரை.. 40 வயது இருக்கும். இவர்தான், லுங்கி, சட்டையுடன் மதுரைக்கு வந்து, காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மறைவான ஒரு இடத்துக்கு செல்கிறார்.
பிறகு கொஞ்ச நேரத்தில், புடவை, ஜாக்கெட் அணிந்து, தலையில் விக் வைத்து பெண் வேடத்தில் வெளியே வந்தார். இவருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதால் பெண் வேடமிட்டு, வீட்டு வேலை செய்கிறார்.
வீட்டு வேலை
மொத்தம் 3 வீடுகளுக்கு சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, பெருக்கி கூட்டி சுத்தப்படுத்துவது என அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்கிறார்.. சாயங்காலம் வேலை முடிந்ததும், திரும்பவும் அதே மறைவிடத்துக்கு வந்து.. விக்கை கழட்டிவிட்டு, லுங்கி, சட்டை அணிந்து பஸ் ஏறி ஊருக்கு போகிறார்.. இதுதான் தினமும் நடந்து வருகிறது.
ராஜா
தினமும் ஒருத்தர் ஒதுக்குப்புறமாக ஏன் ஒதுங்குகிறார் என்று அங்கிருந்தோர் கவனித்து, மடக்கி பிடிக்கவும்தான் விஷயம் வெளியானது: "என் பெயர் ராஜா.. வேலை செய்யும் இடங்களில் ராஜாத்தி.. மானாமதுரையில் எனக்கு எந்த வேலையும் கிடைக்கல.. வயசான அம்மா, அப்பாவை எப்படி காப்பாத்துறதுன்னு தெரியல.. ஒருவேளை பெண்ணாக மாறினால் வேலை கிடைக்கும்னு நினைச்சேன்.
மதுரை
அந்த வேஷம் போட்டுட்டு சொந்த ஊரில் வேலை பார்க்க முடியாது.. எல்லாரும் கிண்டல் செய்வாங்க.. அதனாலதான் ஊருவிட்டு வந்து மதுரையில் வேலை தேடினேன்... 3 வீட்டில் வேலை கிடைக்கவும் செய்து வருகிறேன்.. ஆனால் யாருக்கும் என் மேல சந்தேகம் வரல.. ஒவ்வொரு நிமிஷமும் பெண்கள் போலவே இருக்க படாதபாடு பட்டுட்டு வர்ரேன்.
துரோகம்
இப்படி வேஷம் போட்டு வேலை பார்த்தாலும், நான் என் எஜமானர்களுக்கு எந்த துரோகமும் பண்ணல.. ஒருநாள் இந்த விஷயம் வெளியே தெரியும்னு எனக்கு ஏற்கனவே தெரியும்.. அப்படி தெரியும்போது, என்னை மன்னிச்சு இவங்களே திரும்பவும் வேலைக்கு வெச்சிப்பாங்கன்னு எனக்கு ஒரு நம்பிக்கை.. இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல" என்கிறார் இந்த ராஜா ஸாரி ராஜாத்தி!